மாணவர்களே…நீட் தேர்வுக்கான நேரம் அதிகரிப்பு – தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

Default Image

நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2022-23 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் 543 இடங்களில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

மேலும்,நீட் தேர்வுக்கு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்,தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 7 ஆம் தேதிதான் கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில்,தமிழ்,ஆங்கிலம்,இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வுக்கு,இதுவரை 3 மணி நேரமே வழங்கப்பட்ட நிலையில்,தேர்வுக்கான நேரத்தை மேலும் அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,200 கேள்விகளுக்கு 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு(3 மணி 20 நிமிடம்) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,இந்தியாவுக்கு வெளியே 14 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என என்டிஏ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்