Mission Himachal:20 நாட்களில் பஞ்சாபில் ஊழலை ஒழித்துவிட்டோம்-அரவிந்த் கெஜ்ரிவால்

Default Image

பஞ்சாபில் அமோக வெற்றி பெற்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இமாச்சலப் பிரதேசத்தின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளது.

பஞ்சாபில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்த ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமையன்று, டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டியில் மாபெரும் சாலைப் பேரணியுடன் ‘மிஷன் ஹிமாச்சல்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “நாங்கள் சாமானியர்கள். எங்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது. மாறாக, மக்களுக்காக உழைக்க, பள்ளிகளை உருவாக்க, ஊழலை ஒழிக்க எங்களுக்குத் தெரியும்.

முதலில், நாங்கள் டெல்லியில் ஊழலை ஒழித்தோம், பின்னர் 20 நாட்களில் பஞ்சாபில் ஒழித்தோம், இப்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஊழலை அகற்றுவதற்கான நேரம் இது” என்று கெஜ்ரிவால் பேரணியில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting