பேருந்து கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை – அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்

Default Image

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தகவல்.

நாட்டில் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்த பட்ட போதிலும், தமிழ்நாட்டில் உயர்த்தப்படவில்லை, அதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக வழிகாட்டுதலை உருவாக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. போக்குவரத்துத்துறைக்கு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகர் இருந்த எஸ்எஸ் சிவசங்கர், சமீபத்தில் தான் போக்குவரத்து அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்