சைபர் குற்றவாளிகளை எதிர்கொள்ள நாட்டின் சட்ட அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் -மத்திய அமைச்சர் வைஷ்ணவ்!

Default Image

இணைய குற்ற விசாரணை மற்றும் டிஜிட்டல் தடவியல் தொடர்பான இரண்டாவது தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக அதிக உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் வசதியை அளித்துள்ளது. ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.

அது சில சமயங்களில் நல்லதாக இருந்தாலும், சில சமயங்களில் மோசடியான செயலை செய்ய வழிவகுக்கிறது. சைபர் குற்றங்களை எதிர்ப்பதற்கான சட்ட அமைப்புகள் குறித்து பேசிய வைஷ்ணவ், நாட்டில் சட்ட அமைப்பை பெரிய அளவில் மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது.

கொரோனாவுக்கு முன்னதாக இருந்த சமூகம் தற்போது அதிக அளவில் மாறியுள்ளது. சமூகத்தின் சிந்தனை மற்றும் செயல்பாடு தற்பொழுது அதிகளவில் மாறியுள்ளது. எனவே நாட்டின் சட்டம் அமைப்புகளை முறையாக, புதிதாக கட்டமைக்க வேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்