வெப்ப அலைகள் அதிகரிப்பு – மதியம் 12-4 மணி வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்..!

Default Image

வெப்ப அலைகள் அதிகளவில் இருப்பதால் தெலுங்கானா மக்கள் மதியம் 12 முதல் 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை காலம் தொடங்கி விட்டதால் தொடர்ந்து பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெலுங்கானா, ஹைதிராபாத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வெப்ப அலைகள் உள்ளது.

எனவே, அம்மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுத்துள்ளது. மேலும், தெலுங்கானா மாநில மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள தெலுங்கானா மாநில பொதுசுகாதார அமைச்சர் ஜி ஸ்ரீனிவாஸ் ராவ் அவர்கள், வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. எனவே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 4 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்