விவசாயிகளின் கணக்கில் ரூ.1029.31 கோடி செலுத்திய முதல்வர் பூபேஷ் பாகேல்..!

Default Image

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1029.31 கோடியை மாற்றினார்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் காணொளி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1029.31 கோடியை மாற்றினார். அதே நேரத்தில், கோதன் நீதி யோஜனா திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போர், மகளிர் குழுக்கள் மற்றும் கோதன் குழுக்களுக்கு 13 கோடியே 62 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது, ​​மாநில அரசின் மூன்று முக்கிய திட்டங்களை முதல்வர் பூபேஷ் பாகேல் தொடங்கி வைத்தார்.  இதில், முதலமைச்சரின் நகர்ப்புற குடிசை சுகாதார திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 60 புதிய நடமாடும் மருத்துவப் பிரிவுகளை முதல்வர் திறந்து வைத்தார்.

​​வருவாய் வழக்குகளை நேர வரம்பிற்குள் தீர்ப்பதை மறுபரிசீலனை செய்வதற்கான ஆன்லைன் போர்ட்டலையும் முதல்வர் பூபேஷ் பாகேல் தொடங்கி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்