எம்.பி.க்களுடனான பிரதமர் சந்திப்பு ஒத்திவைப்பு..!

Default Image

மேற்கு வங்க பாஜக எம்.பி.க்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு நாளை மறுநாள் ஒத்திவைப்பு

மேற்கு வங்க பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவிருந்த சந்திப்பு தற்போது நாளை மறுநாள் (மார்ச் 31ஆம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக நாளை நடைபெற இருந்தது. பிர்பும் வன்முறைக்குப் பிறகு மேற்கு வங்காளத்தில் எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

வன்முறைக்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. பிர்பூம் வன்முறை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய பாஜக  மாநிலத்தில் ஜனநாயகம் “கொலை செய்யப்படுவதாக” குற்றம் சாட்டியது. மேலும்,  மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் கொல்லப்பட்டார். பகது ஷேக்கை அதே பகுதியை சேர்ந்த சோனா ஷேக் என்பவரின் ஆதரவாளர்களே குண்டு வீசி கொலை செய்ததாக தகவல் வெளியானதை அடுத்து ஆத்திரமடைந்த ஷேக் ஆதரவாளர்கள் சோனா ஷேக்கின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்