#Breaking:இந்த பல்.கழகத்தில் சேர வேண்டாம்;படிப்புகள் செல்லாது – யுஜிசி எச்சரிக்கை!

Default Image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது. அண்ணாமலை பல்.கழகத்திற்கு கடந்த 2014-15 ஆண்டு வரை மட்டுமே தொலைதூர படிப்புகளுக்கான வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யுஜிசி தெரிவித்துள்ளது.

அதன்பின்னர்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.இதனால்,அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல எனவும், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிதம்பரம் பல்.கழகமே பொறுப்பு எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்