#BREAKING : மாணவன் உயிரிழப்பு – மெட்ரிக் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டிஸ்

Default Image

பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளார்.அதன்படி, 24 மணி நேரத்திற்குள் நோட்டீசுக்கு நேரடியாக பள்ளி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்  என்றும், 64 வயது முதியவரை பள்ளி பேருந்து ஓட்டுநராக நியமித்தது ஏன்? வாகனத்திலிருந்து அனைத்து மாணவர்களும் இறங்கி விட்டனரா என பள்ளி முதல்வர் உறுதி செய்யாதது ஏன்? விபத்து குறித்து  தாளாளர் பிற்பகல் வரை பள்ளிக்கு வராதது குறித்து விளக்கமளிக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்