கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி

Default Image

மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கடந்த பத்து மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ 2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது  என்றும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 மாதங்களில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும் கடந்த ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பாக முழு அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கப் பெறும் என்றும் தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்கள் மக்களுக்கான திட்டங்களாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்