கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானை மூன்று ‘எலிகள்’ கொள்ளையடித்து வருகின்றன: இம்ரான் கான்

Default Image

பாகிஸ்தானில் கடந்த சில வ்ருடங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித்  தவித்து வருகிறது.இதற்கு முழு காரணமாக சொல்லப்படுவது பிரதமர் இம்ரான் கான் என்றும் அவரின் மோசமான அணுகுமுறையை இந்த நிலைமைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இம்ரான் கானுக்கு எதிராக ஆளும் கட்சினர் முதல் கூட்டணி கட்சியினரே எதிராக திரும்பியுள்ளனர்.இதனை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் நாளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்.இதற்கு முன்னரே இம்ரான் கான் பதவி விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த பவர் ஷோ ஒன்றில் பேசிய இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க லஞ்சம் கொடுக்க முன்வந்த  எதிர்க்கட்சிகளின் சலுகைகளை மறுத்ததற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) சட்டமன்ற உறுப்பினர்களை பாராட்டினார். உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

பிரதான எதிர்க்கட்சிகளான (பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி) பற்றி அவர் குறிப்பிடுகையில், இந்த நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக  “மூன்று எலிகள்” கொள்ளையடித்து வருகின்றன.

“கடந்த 30 ஆண்டுகளாக, அவர்கள் கூட்டாக நாட்டின் இரத்தத்தை உறிஞ்சி, வெளிநாட்டில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை குவித்துள்ளனர், வெளிநாட்டு கணக்குகளை வைத்துள்ளனர். இந்த நாடகம் எல்லாம் என்ஆர்ஓ (தேசிய நல்லிணக்க ஆணை)க்காக நடக்கிறது என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்