பிளஸ் டூ முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!

Default Image

இந்திய கடற்படை SSR AA 2022 ஆட்சேர்ப்பு:

பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமிகளாக சேர்வதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை SSR AA 2022:

SSR: senior secondary recruitment (மூத்த இரண்டாம் நிலை ஆள்சேர்ப்பு)

AA: artificer apprentice (கலைஞர் பயிற்சி)

காலியிடங்கள்:

இந்திய கடற்படையில்  மொத்தம் 2500 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணியிடங்கள் இரண்டு பதவிகளுக்கு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே  பணியமர்த்தப்படுவார்கள்.

பதவிகள் காலியிடங்களின் எண்ணிக்கை
ஏஏ 500
எஸ்.எஸ்.ஆர் 2000

 

இந்திய கடற்படை SSR AA காலியிடங்கள் 2022:

நிறுவன பெயர் இந்திய கடற்படை
பணியிடங்கள் பெயர் மூத்த இரண்டாம் நிலை ஆட்சேர்ப்பு [எஸ்எஸ்ஆர்] & ஆர்டிஃபைசர் அப்ரண்டிஸ் [ஏஏ]
மொத்த காலியிடம் 2500
வேலை இடம் இந்தியா
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு  தொடக்க தேதி 29 மார்ச் 2022
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடைசி தேதி 05 ஏப்ரல் 2022
வயது எல்லை 17 – 20
இணையதளம் www.joinindianarmy.gov.in

 

வயது வரம்பு:

உங்கள் வயது 17 முதல் 20 வயது வரை இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். விண்ணப்பதாரர்கள் 1-8-2002 முதல் 31-7-2005 வரை (இரண்டு தேதிகளையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நீங்கள் இந்த பதவிக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

எஸ்எஸ்ஆர், ஏஏ என்ற இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியாக கல்வித்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்  பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.12-ம் வகுப்பில், ஹிச்டோரி மற்றும் ஆர்ட்ஸ் பாடப்பிரிவினர்  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

பதவிகள் கல்வி விவரங்கள்
ஏஏ இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால், அரசால்  அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.(கணிதம் மற்றும் இயற்பியல்) படித்திருக்க வேண்டும்.

கணிதம் & இயற்பியலில் 60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க  வேண்டும்.

அதனுடன் வேதியியல்/உயிரியல்/கணினி அறிவியல் பாடங்கள் படித்தவராக இருக்க வேண்டும்.

எஸ்.எஸ்.ஆர் 60% மதிப்பெண்  பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்தியாவின் கல்வி அமைச்சகத்தால், அரசால்  அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருக்க வேண்டும்.

அதனுடன் வேதியியல்/உயிரியல்/கணினி அறிவியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும்.

 

ஊதிய விவரங்கள்:

இந்த பதவியில் ரூ.21,700/- முதல் அதிகபட்சமாக ரூ.69,100/-வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

1)CBT எழுத்து தேர்வு

2)உடல் தகுதி சோதனை(PFT)

3)மருத்துவ பரிசோதனை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

எழுத்து தேர்வு:

  • இரண்டு பதவிகளுக்கும் (SSR,AA) ஒரே எழுத்து தேர்வு. தேர்வு வினாக்கள் ஆங்கிலம்  மற்றும் இந்தியில் இருக்கும்.
  • மே அல்லது ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெறும்.
தேர்வின் பாடங்கள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் கால அளவு
ஆங்கிலம் 25 25  

1 மணி நேரம்

(60 நிமிடங்கள்)

விஞ்ஞானம் 25 25
கணிதம் 25 25
பொது அறிவு 25 25
மொத்தம் 100 100

 

விண்ணப்பகட்டணம்:

விண்ணப்பங்கள்  பொது சேவை மையங்களில் (CSC ) பதிவு செய்து கொள்ளலாம். நிலையான விண்ணப்பக்கட்டணம்  ரூ.60+GST.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்யமுடியும். www.joinindianarmy.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்