விவாகரத்து செய்யும் போதும் இருவரும் கொஞ்சம் மனவலி உடனேயே பிரிந்தோம் – சோனியா அகர்வால்.!

Default Image

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்தவர் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை , ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது.

இதில் காதல் கொண்டடேன் படத்தின் மூலம் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை, உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வாலை செல்வராகவன் நடிக்க வைத்தார்.

இதனால் செல்வராகவன்-சோனியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின் இருவரும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது எனவே கூறலாம். 4 வருடங்களுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் செல்வராகவனுடன் ஏற்பட்ட விபத்து குறித்து சோனியா அகர்வால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பது, ” செல்வராகவனுடன் இணைந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை தொடர்ந்து படங்களில் நடித்தேன். அப்போது அவரின் ஹார்ட் வொர்க் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பின் இருவரும் காதலிக்க ஆரம்பித்தப் பிறகு திருமணமும் செய்து கொண்டாம். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே போல விவாகரத்து செய்யும் போதும் கொஞ்சம் மனவலி உடனேயே இருவரும் பிரிந்தோம்” என கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவன் மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் ஆண்டு கொண்டார் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்