இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா? – ஈபிஎஸ்

Default Image

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது , இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா? என ஈபிஎஸ் ட்வீட் 

பாலியல் தொந்தரவு 

விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளார்.

போலீசில் புகார் 

இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் அப்பெண் புகார் அளித்த நிலையில் திமுகவை சேர்ந்த 2 பேர், கூலித் தொழிலாளர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய தண்டனை எடுக்கப்பட வேண்டுமென எம்.பி கனிமொழி, கமலஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதான் பாதுகாப்பா? 

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன், கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது , இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்