முக்கிய செய்தி…TNPSC குரூப் 2,2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Default Image

முன்னதாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

தேர்வு எப்போது?:

இந்த சூழலில்,குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்ததது. அதன்படி,கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மே 21ம் தேதி (சனிக்கிழமை) குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

காலிப்பணியிடங்கள்:

நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும்,நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.  தமிழ்நாடு தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் பிப். 23-ஆம் தேதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்றும் மார்ச் 23 ஆம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் எனவும் தேர்வாணையத்துறை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

அறிவிப்பாணை:

அதன்படி,குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிட்டது.இதனையடுத்து,பிப். 23-ஆம் தேதி முதல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில்  விண்ணப்பித்து வருகின்றனர்.

இன்றே கடைசி நாள்:

இந்நிலையில்,குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக மார்ச் 23 ஆம் தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.மேலும்,இது தொடர்பான முழு விவரங்களை பெற http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்