#BREAKING : ஜெயலலிதா மரணம் – 2-வது நாளாக ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜர்..!

Default Image

ஓபிஎஸ் -இடம் 2-வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆறுமுகசாமி ஆணையம் 

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இவரது மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.  தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஓபிஎஸ்-க்கு சம்மன் 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசியிடம் விசாரணை  

தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகியுள்ளார். இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் அவர், அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார். 75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும், ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாக தெரிவித்து இருந்தார்.

ஓபிஎஸ் ஆஜர் 

இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று ஆஜரானார். ஓபிஎஸ் அவர்களுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு, பல்வேறு காரணங்களால் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

தெரியாது என பதிலளித்த ஓபிஎஸ்..! 

ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும், 2016 ஆம் ஆண்டு செப்.22 ஆம் தேதி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்ததாகவும்,அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்று காலை மற்றும் பிற்பகல் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

2-வது நாளாக விசாரணை 

இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் -இடம் 2-வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்த  நிலையில், தற்போது விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம், சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்