மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட் ..!

Default Image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து கண்பார்வையற்ற இளைஞர் சங்கர்  தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.

கண்பார்வையற்ற சங்கரை அழைத்துசென்று லத்தியால் தாக்கிய புகாரில் 3 போலீசார் மீது  எஸ்.பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி,  செந்தில், அசோக், பிரபு ஆகிய 3 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய எஸ்.பி நிஷா  உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்