#BREAKING: கருவறைக்குள் சிலைகளை பதுக்கிய குருக்கள் கைது

Default Image

சிலை திருட்டு:

சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயீ கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன் நான்கு சிலைகள் திருட்டு போனது.  மன்னங்கோயில் கிராம கோயிலின் சிலைகள் திருட்டு தொடர்பாக சூரியமூர்த்தியை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரித்தது. விசாரணையில் வேறு கோவில் சிலையை குருக்கள் சூரியமூர்த்தி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

குருக்கள் கைது: 

இந்நிலையில், சீர்காழி அருகே நெம்மேலியைச் சார்ந்த விசாலாட்சி கோவில் குருக்கள்  சூரியமூர்த்தி கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்ததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்தது. சூரியமூர்த்தி இடம் இருந்து மீட்கப்பட்ட பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என விசாரணை நடைபெற்று வருகிறது.

சூரிய மூர்த்தியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காத்தாயீ அம்மன் வெள்ளி கவசம், இரண்டு வெள்ளி குத்து விளக்கு, சிறிய வெள்ளி குடம் சிக்கின.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்