டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நிறைவு..!

Default Image

டெல்லி சோனியா காந்தி  இல்லத்தில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.  இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் பேசப்பட்டதாகவும்,  நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினை குறித்தும்,  உக்ரேனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் கல்வி தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்