#BREAKING : காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது..!

Default Image

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் வரவேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியில் முழுமையான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து தயார் என மம்தா கூறியது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்