ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்க கூடியது – கடம்பூர் ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்க கூடியது. பிரதமர் மோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் ஆனதிலிருந்து இந்த கருத்தை சொல்லி வருகிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பிரதமர் மோடி கூறினால் அது அரசியல்ரீதியாக பார்க்கப்படும். ஆனால் அதே கருத்தை நடைமுறை படுத்துகின்ற தேர்தல் ஆணையமே கூறியிருப்பது வரவேற்க கூடியது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.