கான்பூரில் சாலை விபத்தில் சிறுத்தை பலி..!

Default Image

கான்பூரின் புதிய சௌக் பிரதாப்பூர் கிராமத்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வயல்களில் சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தையின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து  வந்தனர்.

வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கான்பூரின் மாவட்ட வன அதிகாரி கூறுகையில் “இது ஆண் சிறுத்தை ,4 வயது இருக்கலாம் என்றும் இது வாகனம் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளது.

மேலும் வயலை ஒட்டிய நெடுஞ்சாலையில் சிறுத்தையின் மீது வாகனம் மோதியதில் சிறுத்தையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்