#Breaking:மக்களே கவனமாக இருங்க…மீண்டும் அதிகரித்த கொரோனா;ஒரே நாளில் 255 பேர் பலி!

Default Image

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 4,184 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 4,194 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 90 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,84,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 104 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 255 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,15,714 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 6,208 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,26,328 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 44,488 ஆக இருந்த நிலையில்,தற்போது 42,219ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,79,72,00,515 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 16,73,515 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்