ஷகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு..!

Default Image

பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விளையாடாமல்  ஓய்வில் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் மார்ச் 12 முதல் ஏப்ரல் 8 வரை நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷாகிப் “உடல் மற்றும் மன நிலை” காரணமாக ஒரு  இடைவெளி எடுப்பதாகக் கூறினார்.  சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி சுற்று பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் உடன் மூன்று ஒருநாள்  மற்றும் இரண்டு T20I போட்டிகளில் விளையாடியது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில்  ஷாகிப்  74 ரன்கள் மற்றும் ஏழு விக்கெட்டுகளை எடுத்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்