#BREAKING: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுக – தூதரகம் திடீர் அறிவிப்பு

Default Image

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ரயில் உள்ளிட்ட எதாவது, ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி இந்தியர்கள் அனைவரும் வெளியேறுங்க என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், போர் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், இதனை பயன்படுத்தி அங்கிருந்து வெளியேற உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் விமானம் மூலம் தொடர்ந்து தாயகம் அழைத்துவரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting