இந்த நாளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்..! சிறுபான்மை நல ஆணைய தலைவர் முதல்வரிடம் கோரிக்கை..!

Default Image

இயேசு பிரான் உயிர் தியாகம் செய்த புனித வெள்ளிக்கிழமை அன்று டாஸ்மாக் கடைகளையும்,மதுக்கூடங்களையும் மூடிட ஆணை பிறப்பிக்கவேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

அதில், ‘உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து தரப்பினரும் இயேசு பிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையினை துக்கநாளாக “புனித வெள்ளியாக” அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தியாகத்தை நினைவு கொள்ளும் வகையில் உண்ணாநோன்பிருந்தும், இரத்த தானம் செய்தும் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

உலக வரலாற்றை இரண்டாக பிளந்த, இந்த மகத்தான தியாகத்தை அங்கீகரிக்கின்ற வகையில் புனித வெள்ளியன்று (15-4-2022) டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன். அத்தகைய அறிவிப்பு இயேசுவின் உயிர் தியாகத்திற்கு சிறப்பான அஞ்சலியாக அமையும்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்