#BREAKING: ஜெயலலிதா மரணம்: ஓபிஎஸ்ஸிடம் விரைவில் விசாரணை!

Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்துகளை தெரிவித்தனர்.
இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிரா‌க அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம்  விசாரணைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்ப்பு அப்போலோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

மேலும், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவு 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. இதன் காரணமாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் 15-ஆம் தேதிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக அப்போலோ மருத்துவரிகளிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்