ஷேன் வார்னின் துண்டுகளிலும் ரத்தக்கறை – தாய்லாந்து போலீஸ்..!

Default Image

ஷேன் வார்னின் மரணத்திற்குப் பிறகு, மருத்துவர்களிடமிருந்தும், தாய்லாந்து காவல்துறையிலிருந்தும் புதிய தகவல் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.  ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் மாரடைப்பால் காலமானார். வார்னின் மரணத்திற்குப் பிறகு தாய்லாந்து காவல்துறை வெளியிட்ட தகவலில், வார்னின் அறையின் தரையிலும் துண்டுகளிலும் ரத்தக் கறைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, ஷேன் வார்னுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தபோது அவருக்கு இருமல், ரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறினர். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு அவரது நண்பர் சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்