#BREAKING: காலியாகவுள்ள 13 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு..!

Default Image

ராஜ்யசபா உறுப்பினர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, பர்தாப் சிங் பாஜ்வா, நரேஷ் குஜ்ரால் என பல தலைவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளா, அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகவுள்ள எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் தலா ஒரு இடங்கள் காலியாகவுள்ளது. இதனால்,  இந்த அனைத்து இடங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். அதே சமயம், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்கும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு மார்ச் 24 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 31ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அன்றைய தினம் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதிக்கு முன் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது.  தேர்தல் மற்றும் வாக்குப்பதிவின் போது கொரோனாநெறிமுறையை பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கைபடி, பஞ்சாப் மாநில ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 9 அன்று முடிவடைகிறது. மற்ற மாநில உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Tamilnadu CM MK Stalin
tn rain
Kerala CMO bomb threat
PUDUCHERRY'
16 Youtube channels block
TN CM MK Stalin