க.அன்பழகனின் நினைவு தினம்- முதல்வர் மரியாதை..!

Default Image

இன்று மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் அன்பழகன் படத்திற்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர், “திராவிடமே தன் உயிரெனக் கொண்டவர்; தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என மேடைதோறும் முழங்கியவர்; தலைவர் கலைஞரின் உற்ற தோழர்; என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் ஆசானாகவும் விளங்கிய இனமானப் பேராசிரியரின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கத்தை உரித்தாக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்