இன்று முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு;வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள்!

கொரோனா தொற்று குறைந்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அதன்படி,பள்ளிகள், கல்லூரிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த ஜனவரி 10 முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து,கடந்த ஜனவரி 18 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில்,கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகள்,கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அதன்படி,1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக,புதுச்சேரியில் பள்ளிகள்,கல்லூரிகளில் இன்று முதல் வாரத்தில் 6 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும்தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025