நகை கடன் தள்ளுபடி – வட்டி செலுத்த வற்புறுத்தினால் நடவடிக்கை – அமைச்சர் ஐ.பெரியசாமி

Default Image

அரசின் அறிவுறுத்தலை மீறி வட்டி செலுத்த வற்புறுத்தினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இறுதிப்பட்டியல் பயனாளிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் என்றும், அரசின் அறிவுறுத்தலை மீறி வட்டி செலுத்த வற்புறுத்தினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07 03 2025
TVKVijay - Iftar
rohit sharma retirement
tvkvijay
annamalai BJP
busaccident
Kingston Review