#Breaking:இந்தியர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லி புறப்பட்டது!

Default Image

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து இந்தியர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது.

உக்ரைனை 7-வது நாளாக ரஷ்யா உக்கிரமாக தாக்கி வருகிறது. அந்த வகையில்,உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியில் மிகப்பெரிய அளவில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,உக்ரைனில் இருந்து வெளியேறி அதன் அண்டை நாடுகளான ருமேனியா,போலந்து,ஹங்கேரி வரும் இந்தியர்கள் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அதன்படி,60 % இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி விட்டதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து இந்தியர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளது.

அதே சமயம்,உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஹிண்டன் விமான தளத்தில் இருந்து இரண்டு இந்திய விமானப்படை விமானங்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு புறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்