ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும்- உக்ரைன் அதிபர்..!

Default Image

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக ஐரோப்பா கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது, ஐரோப்பா கூட்டமைப்பு சட்டங்களை மீறி உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் குண்டு வீசி தாக்குவதாகவும், மக்களில் சிலருக்கு இந்த நாள் நல்ல நாளாக இல்லை. வேறு சிலருக்கு இந்த நாள் தான் வாழ்வின் கடைசி நாள். தாய்நாட்டை பாதுகாத்துக் கொண்டு இருக்கும் உக்ரைன் குடிமக்களை பற்றி நான் பேசுகிறேன் என தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பா கூட்டமைப்பு  ஒற்றுமையுடன் இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் குண்டு வீச்சில் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். 5 நாட்களாக ரஷ்ய கூட்டமைப்பு குழு அளவிலான தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி வருகிறது. சுதந்திரமாகவும் , சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதற்க்காக உயிரை தியாகம் செய்து வருவதாகவும், உக்ரைனியரான நாங்கள் யாரையும் வெற்றிகொள்வோம்.

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும்  சுதந்திர சதுக்கம் உக்ரைனில் கீவ் நகரில் அமைந்துள்ளது. இன்று காலையில் உக்ரைனின் சுதந்திர சதுக்கத்தின் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டதில் பலநூறு பேர் மாண்டு விட்டனர். சுதந்திரத்துக்கான போருக்கு, உக்ரைனியர்கள் பல நூறு உயிர்களை விலையாக கொடுத்துள்ளனர். எங்கள் மண்ணுக்கான , சுதந்திரத்துக்காக உக்ரைன் மக்கள் உயிர்களை தியாகம் செய்து கொண்டு வருகின்றனர்.

உக்ரைனின் அனைத்து நகரங்களும் யாரும் நுழைய முடியாதபடி தடைகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளன.  யாராலும் எங்கள் ஒற்றுமையை உடைக்க முடியாது. உக்ரைனியர்களான நாங்கள் பல மாணவர்கள், எங்கள் குழந்தைகள் உயிர் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நேற்று ரஷ்ய இராணுவம் குண்டு வீசியதில் 16 குழந்தைகள் கொல்லப்பட்டு விட்டனர். இராணுவ நிலைகளை தாக்கியதாக புதின் கூறுகிறார். எந்த இராணுவ தொழிற்சாலையில் குழந்தைகள் பணியாற்றுகின்றனர்? ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும்  என தெரிவித்தார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்