#BREAKING : சமூகநீதி கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை…! முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

Default Image

அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. ஒரு அமைப்பை தொடங்குவதற்கு முன் ஒத்த கருத்து கொண்டவர்களை அழைத்துப் பேசி விவாதிக்க வேண்டும். விவாதிக்காமல் அமைப்பை ஏற்படுத்தி விட்டு பிரதிநிதியை நியமிக்க கூறுவது கூட்டாட்சிக்கு முரணாக உள்ளது.

 தங்களின் கடிதத்தை துருவித்துருவி பார்த்தபோது தமிழக மக்களின் நலன் எதுவும் இல்லை. நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். சமூகநீதியில் தான் இப்படி எனில் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்துவதிலும்  திமுக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்