5 வருடங்கள் ஒழுங்காக படித்தால் ராஜா போல வாழலாம்..! மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் அறிவுரை..!

Default Image

சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்த நிலையில், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அவர்கள் பேருந்தை நிறுத்தி  மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தி அறிவுரை வழங்கினார். 

சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அவர்கள் பேருந்தை நிறுத்தி  மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அவர்களிடம் பிளஸ் டூ இரண்டு வருடம், கல்லூரி மூன்று வருடம் என ஐந்து வருடங்கள் ஒழுங்காக படித்தால் ராஜா போல வாழலாம். இல்லாவிட்டால் ஐம்பது வருடங்களுக்கு  அம்போனுதான் போகணும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

அதனை தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களை நிறுத்திய அவர், இளைஞர்கள் அறிந்திருந்தால் கடுக்கானை கழற்ற வைத்து, தலை முடியை சீராக வெட்டுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்