#Breaking:உ.பி.யில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Default Image

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி,அமேதி உள்ளிட்ட உள்ள 61 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியது.

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.அந்த வகையில் இதுவரை நான்கு கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில்,உத்தரப்பிரதேசத்தில் உள்ள 61 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு சற்று முன்னர் காலை 7 மணிக்கு தொடங்கியது.அயோத்தி, அமேதி உள்ளிட்ட 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த 5 ஆம் கட்ட தேர்தலில் 693 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்,2.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மேலும்,5 ஆம் கட்ட தேர்தலுக்காக 25,995 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்