உக்ரைனில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் 16 பேர் மீட்பு!

Default Image

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் சிக்கி இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து ஹங்கேரி, ருமேனியா வந்த தமிழ்நாட்டை 17 மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். ருமேனியாவில் இருந்து 5 மாணவர்களும், ஹங்கேரியில் இருந்து 11 மாணவர்களும் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்படுகின்றனர்.

உக்ரைனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு விமானத்தில் வந்துசேரும் 16 மாணவர்களை தமிழகம் அழைத்துவர அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இவர்களுக்கான பயண கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 219 இந்தியர்கள், விமானத்தில் ருமேனியாவில் இருந்து புறப்பட்டுவிட்டது. மேலும், ஹங்கேரி தலைநகர் புக்காரெஸ்ட் வழியாக இரண்டாவது விமானத்தின் மூலம் இன்று நள்ளிரவு 2 மணியளவில் இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்துவரப்படுகின்றனர். ருமேனியாவின் புக்காரெஸ்ட்டிலிருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானத்தில் தமிழக மாணவர்கள் வருவது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar