உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

Default Image

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது.இதனால்,உக்ரைனை சார்ந்த ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்தார்.இந்நிலையில்,உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற உள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்