#BREAKING : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு ..வழக்குப்பதிவு.!

Default Image

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதுரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து,தாக்கப்பட்ட திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர், மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதுரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்