#BREAKING: இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் புடின் உறுதி

Default Image

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.

உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புடின் கூறியுள்ளார். அங்கு வாழும் அனைத்து உயிர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்பும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.

அதாவது, தாயகம் திரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் மற்றும் அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும். ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் உறுதியளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar