வெளுத்து வாங்கிய ஷ்ரேயாஸ், ரோஹித், இஷான் கிஷன்: இலங்கைக்கு 200 ரன்கள் இலக்கு ..!

Default Image

இந்திய அணி 20 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய ரோஹித் 12-வது ஓவரில் லஹிரு குமாரிடம் போல்ட் ஆகி  44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 111 ரன்கள் எடுத்தனர்.  பின்னர், ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடியதால் சதம் விளாசுவர் என எதிர்பட்டப்பட்ட நிலையில் 56 பந்தில் 89 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.  அதில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும்.

பின்னர் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர்  சிறப்பாக விளையாடிய 25 பந்தில் அரைசதம் விளாசி 57* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.  இறுதியாக இந்திய அணி 20 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். 200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்