#BREAKING: ரஷ்ய பிரதமருடன் பேசும் பிரதமர் மோடி..?

Default Image

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக இன்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் இன்று காலை முதல் தாக்கல் நடத்தி வருகிறது.  சற்று நேரத்திற்கு முன் பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர்.

இதற்கிடையில், போரை நிறுத்த இந்திய பிரதமர் தலையிடுவதற்காக காத்திருப்பதாகவும்,  ரஷ்ய அதிபர் புதின் யாருடைய பேச்சை கேட்பார் என்று தெரியவில்லை. ஆனால் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடனும் பேச முடியும், உக்ரைன் அதிபருடனும் பேச முடியும். வரலாற்றில் பலமுறை அமைதியை ஏற்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும், பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என நம்புகிறேன் என்று இந்தியாவிற்கு உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக இன்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்