காந்தி நினைவு தினம்- ஆளுநர் , முதலமைச்சர் மரியாதை..!

Default Image

காந்தியடிகளின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

காந்தியடிகளின் நினைவு நாளானது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ஆம் தேதி “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், காந்தியடிகளின் 75-வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலை கீழ் மகாத்மா காந்தி திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளது. காந்தியடிகள் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்