காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

Default Image

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டம் நயிரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிளும், புத்கம் மாவட்டத்தின் சரார் ஐ ஷரீப் பகுதியில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் அவர்கள் கூறுகையில், ‘மணி நேரமாக நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பில் கமாண்டராக செயல்பட்ட ஜாகித் வானி. மற்றொருவன் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி. மற்ற 3 பேரும், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். இது, பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.’ என தெரிவித்துள்ளார்.

மேலும், துப்பாக்கி சூடு நடத்த இடத்தில் இருந்து, துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையிர் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்