நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இல்லை!

Default Image

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கேள்வி நேரம் இல்லை என அறிவிப்பு.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடிக்க அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதே கூட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி குடியரசு தலைவரின் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், ஜன.31 மற்றும் பிப் 1 ஆகிய தேதிகளில் கேள்வி நேரம் மற்றும் கேள்வி இல்லா நேரம் கிடையாது என அறிவிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்