தேர்தலில் போதிய இடங்கள் ஒதுக்க கோரிக்கை- திருமாவளவன்..!

Default Image

மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு  வாய்ப்பு தர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றவுள்ளது.  இதனால் அனைத்து கட்சிகளும் இடஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு  வாய்ப்பு தர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட அளவில் திமுக நிர்வாகிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அரியலூர் மாணவி விவகாரத்தில் மதவாத சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றனர்.  மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். நவநீதகிருஷ்ணன் மீதான நடவடிக்கை அதிமுகவின் உட்கட்சி விவகாரம்.  நவநீதகிருஷ்ணன் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்