மகாராஷ்டிராவில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைப்பு- டிஜிபி அறிவிப்பு..!

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி பெண் காவலர்கள் 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரம் மட்டும் பணியில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் பெண் காவலர்களுக்கு நற் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பெண் காவலர்களின் பணி நேரத்தை அரசு குறைத்துள்ளது. மகாராஷ்டிர மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே பிறப்பித்த உத்தரவின்படி, பெண் காவலர்கள் இனி 12 மணி நேரத்திற்குப் பதிலாக எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

பெண் காவலர்களுக்கான புதிய குறுகிய வேலை நாள் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் எனவும் மகாராஷ்டிராவில் தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பணி நேரம் 12 நேரமாக உள்ளது.  இந்நிலையில், இனிமேல் மகாராஷ்டிராவில்  பெண் காவலர்களுக்கு பணி நேரம் 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரம் மட்டும் பணியில் இருக்க வேண்டும் என அம்மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மறு உத்தரவு வரும் வரை பெண்களுக்கு எட்டு மணி நேரப் பணி அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராம புறங்களில்  இந்த திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர காலங்களில் பெண் காவலர்களின் பணி நேரத்தை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்