கொரோனா பாதிப்பு நிலவரம் – மத்திய அரசு ஆலோசனை…!

Default Image

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம் உட்பட தென் மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்கிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா,  புதுச்சேரி. லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் சுகாதார அமைச்சர்ளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்