ஜன.29ம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு..!

Default Image

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜன.29ம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) பிப்.5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஹமிழகம் முழுவதும், பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜன.29ம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) கொரோனா தொற்று பரவல் காரணமாக பிப்.5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை வரும் ஜன.25ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்